மதுரை மாநகராட்சி சார்பில் 2,752 தூய்மை பணியாளர்களை
கொண்டு, கருணாநிதியின் உருவத்தை உருவாக்கி
உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி சார்பில், ரேஸ்கோர்ஸ் விளையாட்டு மைதானத்தில் தூய்மைப்
பணியாளர்களைக் கொண்டு, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின்
உருவத்தை பதிவாக்கும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு
தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன்
கலந்து கொண்டு, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் 2752 தூய்மை பணியாளர்கள் 100 மீட்டர் நீளம் மற்றும்
70 மீட்டர் அகலத்தில் அமர்ந்து, கலைஞரின் திரு உருவத்தை பதிவு செய்தனர்.
இந்த பதிவு காலை 7.23 மணிக்கு துவங்கி காலை 8. 43 மணிக்கு நிறைவு
பெற்றது. இந்த நிகழ்ச்சி உலக சாதனை (Triumph) புத்தகத்தில் பதிவு
செய்யப்பட்டது.
இதற்கான சான்றிதழை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ஆட்சியர்
சங்கீதா, வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி, மேயர் இந்திராணி பொன்
வசந்த் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பிரவீன் குமார் ஆகியவரிடம்
வழங்கப்பட்டது. ஒரு மணி நேரம் 20 நிமிடத்தில் கலைஞரின் திருவுருவத்தை
தூய்மை பணியாளர்கள் அமர்ந்து உருவாக்கிய நிகழ்ச்சி, அனைவரையும்
ஆச்சரியத்திற்கு உள்ளாகியது.
—கு. பாலமுருகன்








