இந்தியா வந்துள்ள இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனிக்கு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பான வரவேற்பு அளித்தார்.

இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி அரசு முறைப் பயணமாக இன்று காலை இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பாரதி பவார் வரவேற்றார். பின்னர் டெல்லியில் உள்ள காந்தி நினைவிடம் சென்ற மெலோனி, அங்கு மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகையில் மெலோனியை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இத்தாலி பிரதமருடன் அந் நாட்டின் துணைப் பிரதமர், வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தாஜானியும், வர்த்தக குழுவும் வந்துள்ளனர்.
இதற்கிடையே டெல்லியில் பிரதமர் மோடியை இத்தாலி பிரதமர் சந்தித்துப் பேசினார். அப்போது ராணுவம், பாதுகாப்பு, பொருளாதாரம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர். மேலும், இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியா – இத்தாலி இடையே தூதரக உறவுகள் ஏற்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.








