திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான பக்தர்கள் தங்கும் விடுதியில் அசைவ விருந்து

திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான பக்தர்கள் தங்கும் விடுதியில் கோயில் அதிகாரிகள் அசைவ விருந்து திருவள்ளூர் மாவட்டம் ஆறுபடை வீடுகளின் ஒன்றான ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய…

திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான பக்தர்கள் தங்கும் விடுதியில் கோயில் அதிகாரிகள் அசைவ விருந்து

திருவள்ளூர் மாவட்டம் ஆறுபடை வீடுகளின் ஒன்றான ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் இருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். மேலும் கோயிலுக்கு சொந்தமான கார்த்திகேயன் இல்லம் ,தணிகை இல்லம் விடுதிகளில் கட்டண அடிப்படையில் பக்தர்களுக்கு அறைகள் வழங்கப்பட்டு வருகிறது .கோவிலுக்கு வரும் பக்தர்கள் குடியிருப்பு அறையில் தங்கி விரதம் இருந்து தங்களது நேர்த்திக்கடனை நிவர்த்தி செய்து,மறுநாள் காலை சிறப்பு அபிஷேகத்தில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வதும் மற்றும் மலைக்கோவிலில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதும் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் பக்தர்கள் பங்கேற்கின்றனர். திருத்தணி முருகன் கோவிலில் மேற்பார்வையாளராக பணிபுரியும் உயர் பதவியில் இருக்கக்கூடிய கலைவாணன் மற்றும் வித்யாசாகர் இருவரும் கார்த்திகேயன் இல்லம் அறையில் அமர்ந்து அசைவ சாப்பாடு சிக்கன் ,முட்டை ,மீன் வருவல் போன்ற உணவுகளை அருந்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதால் பக்தர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பக்தர்கள் தங்கும் புனிதமான அறையில் பொறுப்பெற்ற முறையில் இருக்கக்கூடிய அதிகாரிகள் கோவில் அறையில் அமர்ந்து அசைவ சாப்பாடு சாப்பிடும் அதிகாரிகள் மீது இந்து சமய அறநிலைத்துறை அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முருக பெருமானின் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.