முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
சென்னை வேப்பேரியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் மாவட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் நியமனம், போட்டி பொதுக்குழு நடத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கிடையே, நேற்று இரவு, சென்னை அசோக்நகரில் உள்ள பண்ருட்டி ராமசந்திரன் இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவசர ஆலோசனை நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், இன்று நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.