கொரோனா தடுப்பு குறித்து ஆலோசனைகளை வழங்குவதற்காக, முதலமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் சட்டமன்ற அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டம் 13 ஆம் தேதி நடைபெற்றது. அதில், ‘நோய்த் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் விதிமுறைகள் குறித்த ஆலோசனைகளை வழங்க சட்டமன்ற கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களை கொண்ட ஆலோசனை குழு அமைக்கலாம்’ என்ற தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
அதன்படி அனைத்து சட்டமன்ற கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, பின்வரும் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு, முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்படுகிறது.
திமுக, மருத்துவர் நா.எழிலன், அதிமுக, மருத்துவர் சி. விஜயபாஸ்கர், காங்கிரஸ் ஏ.எம். முனிரத்தினம், பாட்டாளி மக்கள் கட்சி, ஜி.கே. மணி, பாஜக, நயினார் நாகேந்திரன், மதிமுக, மருத்துவர் சதன் திருமலைக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி, எஸ்.எஸ். பாலாஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வி.பி. நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தி. ராமசந்திரன், மனிதநேய மக்கள் கட்சி முனைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ரா.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி, தி.வேல்முருகன், புரட்சி பாரதம், பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த ஆலோசனை குழு, அவசர அவசியம் கருதி நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசனைகள் பெற அவ்வப்போது கூடி விவாதிக்கும். இக்குழுவிற்கு பொதுத்துறை செயலாளர் உறுப்பினர் செயலராக செயல்படுவார் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.







