25 C
Chennai
December 1, 2023
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டில் 9 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

மிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு 9 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 8,633 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 6 ஆயிரத்து 497 ஆக அதிகரித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 649 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. இதில் 8,633 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றில் இருந்து 19 ஆயிரத்து 860 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 22 லட்சத்து 86 ஆயிரத்து 653 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள் ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில், 287 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 30,835 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக 492 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 48 பேர் உயிரிழந்துள்ளனர். 1762 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஈரோட்டில் 964 பேருக்கும் திருப்பூரில் 481 பேருக்கும் சேலத்தில் 541 பேருக்கும் கோவையில் 1089 பேருக்கும் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy