83-வது கோல்டன் குளோப் விருதுகள் அறிவிப்பு : விருதுகளை அள்ளிய டிகாப்ரியோவின் படம்…!

83 வது கோல்டன் குளோப் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது.

சர்வதேச விருதுகளில் முக்கியமானது கோல்டன் குளோப் விருதுகள்.  இந்த விருதானது ஹாலிவுட் ஃபாரின் பிரஸ் அசோசியேஷனால் சர்வதேச திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன் படி 2025ம் ஆண்டில் வெளியான சிறந்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்கான 83 வது கோல்டன் குளோப் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற இந்த விழவில் மொத்தம் 27 விருதுகள் வழங்கப்பட்டன. இதில் திரைப்படங்களுக்கான 14 விருதுகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான 13 விருதுகள் அடங்கும்.

இயக்குநர் பால் தாமஸ் ஆண்டர்சன் – லியோனார்டோ டிகாப்ரியோ கூட்டணியில் வெளியான‘ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்’ (One Battle After Another) திரைப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த இயக்குநர் ஆகிய விருதுகளை வென்றது. மேலும் இப்படத்தில் நடித்த டேயானா டெய்லர் சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்றார். அதே போல “Hamnet” மற்றும் “Sinners” ஆகிய திரைப்படங்கள் தலா இரண்டு விருதுகளைப் பெற்றன.

அடுத்ததாக தொலைக்காட்சி பிரிவில், ‘அடோலசென்ஸ்’ (Adolescence) தொடர் சிறந்த லிமிடெட் சீரிஸ் உட்பட மொத்தம் 4 விருதுகளை வென்றது. ஆங்கிலம் அல்லாத பிறமொழிகள் படத்தில் ‘தி சீக்ரெட் ஏஜென்ட்’ (The Secret Agent) விருதை வென்றது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த பாட்காஸ்ட் பிரிவில்,‘ஏமி போலருக்கு  ‘Good Hang With Amy Poehler’ நிகழ்ச்சிக்காக முதல் கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.