தமிழ்நாட்டில் இன்று 802 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த பல நாட்களாக 900 க்கும் குறைவான அளவிலேயே தினசரி பாதிப்பு பதிவாகிவுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஒரே நாளில் 802 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,15,632 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 12 பேர் இன்று உயிரிழந்தனர். இதனால் மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,296 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 918 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26,69,848 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 9,488 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டங்களைப் பொறுத்தவரை சென்னையில், கடந்த 24 மணி நேரத்தில் 122 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 98 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர். கோவையில் 124 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற மாவட்டங்களில் 100க்கும் குறைவாகவே பாதிப்பு பதிவாகியுள்ளது.