75வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை சென்டரல், மதுரை விமான நிலையம், சென்னை விமான நிலையம் உள்ளிட்ட இடங்கள் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
நாளை இந்தியா முழுவதும் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளனர், இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக மூவர்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.

இதனை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் இரவில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் மதுரை விமான நிலையத்தை பார்த்தும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு சென்றனர்.

இதனை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








