சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல், நாகல்கேணி பகுதியில் விநாயகர் சதுர்த்தி
விழாவில் ரெடியோ ஒலி தகராறில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது.
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல், நாகல்கேணி, காந்தி நகரை சேர்ந்தவர்
ஞானசம்பந்தன், அவரது சகோதரர் சரவணன், இருவரும் சாலையோரம் தங்கி, கூலி வேலை செய்து வந்தனர். நேற்று இரவு, நாகல்கேணி, அண்ணா தெருவில் உள்ள காலி இடத்தில் மது அருந்திவிட்டு செல்லும் பொழுது அப்போது, அங்கு வந்த ஒரு கும்பல், அவர்களிடம் தகராறில் ஈடுப்பட்டனர். பின்பு அந்த கும்பல் சகோதரர்கள் இருவரையும், சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஒடினர். இதில், படுகாயமடைந்த ஞானசம்பந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் சரவணன் படுகாயமடைந்த நிலையில் தகவலறிந்து வந்த போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். படுகாயமடைந்த சரவணனை, சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில், பம்மல், பூம்புகார் நகரில், செப்.,3ம் தேதி, விநாயகர் சிலைவைத்திருந்த இடத்தில் பல்வேறு விழா நடைப்பெற்றது. அப்போது, ரேடியோவில் அதிக ஒலி உள்ளதாக கூறி, ஞானசம்பந்தன் சகோதரர்கள், விழா நடத்தியவர்களிடம் தகராறில் ஈடுப்பட்டுள்ளனர்.
ராஜேஷ் என்பவருக்கும், ஞானசம்பந்தன் சகோதரர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு, பின்பு கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது, ராஜேஷிடம், கவனமாக இரு, இல்லையெனில் கொலை செய்துவிடுவோம் என ஞானசம்பந்தன் சகோதரர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், பயந்துபோன ராஜேஷ்குமார், முந்திக்கொண்டு, நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் ஆறு பேருடன் சென்று, இருவரையும் வெட்டியுள்ளார். இது தொடர்பாக, சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுனரான ராஜேஷ்குமார் உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்தனர்.







