ஏற்காடு ஏரியில் 8 மாதங்களுக்கு பின்னர், படகு சவாரி மீண்டும் தொடங்கியதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுலாத் தலத்தில், சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அங்குள்ள ஏரியில், படகு சவாரி, கடந்த மார்ச் இறுதியில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், ஊரடங்கு தளர்வு காரணமாக, கடந்த மாதம் அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜாத் தோட்டம் உள்ளிட்டவை திறக்கப்பட்டன. இந்நிலையில், தற்போது ஏரியில் படகு சவாரியும் தொடங்கப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.







