இந்தியாவில் ஜூன் 30 ஆம் தேதி வரை 56 பேர் உருமாறிய டெல்டா பிளஸ் வகை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே பால், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, ஒற்றை டோஸ் தடுப்பூசி தொடர்பாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஹைதராபாத்தில் உள்ள பயோ-இ நிறுவனத்திலும் அந்த தடுப்பூசியை தயாரிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
நாட்டில் இதுவரை 12 மாநிலங்களை சேர்ந்த 56 பேரிடம் டெல்டா ப்ளஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகக் தெரிவித்த அவரிடம், உலகின் முதல் டி.என்.ஏ கொரோனா தடுப்பூசியான சைடஸ் காடிலா (Zydus Cadila) நிறுவனத்தின் தடுப்பூசி குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த வி.கே. பால், சைடஸ் காடிலாவின் விண்ணப்பம் நிபுணர் குழுவின் மதிப்பீட்டு செயல் முறைக்கு உட்பட்டுள்ளது. நேர்மறையான பதில் கிடைக்கும் என நம்புகிறோம். டி.என்.ஏ தடுப்பூசி தனித்துவமான தொழில்நுட்பம் என்பதால் ஒப்புதல் பெறுவது பெருமைக்குரிய தருணமாக இருக்கும் என்றார்.