திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் 50 கிலோ மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதி மற்றும் எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்ட போது அவ்வழியாக ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த தமிழக அரசு பேருந்து மற்றும் வாகனங்களில் கடத்தி வந்த சுமார் 50 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கஞ்சாவை பைகளில் மறைத்து கொண்டு வந்த திண்டுக்கல்லை சேர்ந்த செல்வராஜ் ஒச்சப்பன் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி ஒச்சப்பன் ஆகிய 4 பேரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து சிப்காட் காவல் துறையினர் மற்றும் ஆரம்பாக்கம் காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை புறநகர் பகுதிகளில் விற்பனை செய்வதற்காக கஞ்சாவை கடத்தி வரும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.