தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.
தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்றங்களின் பதவிக் காலம் விரைவில் முடிவு பெற உள்ளது. எனவே இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக 5 மாநிலங்களுக்கும் நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தியதுடன், சம்பந்தப்பட்ட அரசு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையும் மேற்கொண்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படியுங்கள் : இஸ்ரேல் – ஹமாஸ் போர் : ஒரே இடத்தில் 260 சடலங்கள்; பலி எண்ணிக்கை 1,100 ஆக உயர்வு!!
இந்நிலையில் 5 மாநில தேர்தல் தேதிகளையும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் இன்று அறிவித்தார்.
- சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- மிசோரத்தில் நவம்பர் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- ராஜஸ்தானில் நவம்பர் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
- தெலங்கானாவில் நவம்பர் 30-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேற்கண்ட அனைத்து மாநிலங்களுக்குமான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகளும் வெளியாக உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் முன்னோட்டமாக இந்த 5 மாநிலத் தேர்தல்கள் கருதப்படுவதால் நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.