பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் சென்ற பயணிகள் ரயிலில் பொம்பை துப்பாக்கியை வைத்து பயணிகளை அச்சுறுத்திய கேரள இளைஞர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் சென்ற பயணிகள் ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தை கடந்தவுடன் அதில் பயணம் செய்த 4 இளைஞர்கள் கை துப்பாக்கியுடன் சக பயணிகளை அச்சுறுத்தியாக கூறப்படுகிறது. இவற்றை பார்த்து பயணிகள் அச்சமடைந்த நிலையில், ரயில் பெட்டியில் உள்ள ரயில்வே அவசர எண் மூலம் ரயில்வே கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு அவர்கள் புகார் அளித்தனர்.
இதனையடுத்து, அந்த ரயில் கொடைக்கானல் ரோடு செல்வதற்குள் அங்கு இருப்புப்பாதை காவல் துறையினர் மற்றும் அம்மையநாயக்கனூர் காவல் துறையினர் விரைந்தனர். அந்த ரயில் வந்தவுடன் 4 இளைஞர்கள் இருந்த பெட்டியைச் சுற்றி வளைத்தது, அவர்களை தைது செய்தனர்.
அவர்களின் உடைமைகளை சோதனை செய்து அவர்களிடமிருந்து கை துப்பாக்கி ஒன்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், மேலும் தீவிர விசாரணை செய்ததில் அவர்களிடமிருந்து பொம்மை துப்பாக்கியென தெரியவந்தது.
விசாரணையில் கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த அமீன் ஷெரீப் (19), கண்ணூரைச் சேர்ந்த அப்துல் ராசிக் (24), பாலக்காட்டைச் சேர்ந்த ஜப்பல்ஷா (18) மற்றும் காசர்கோட்டைச் சேர்ந்த முகமது சின்னான் (20) என்பதும், அவர்கள் பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் சென்ற ரயிலில் மதுரை வரை சென்று மதுரையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவுக்கு செல்வதாக தெரிய வந்தது.
சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.