36.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மும்பையில் இந்தியா கூட்டணியின் 3வது கூட்டம்; ஆக.,31 – செப்.,1ல் கூட்டத்தை நடத்தும் உத்தவ் தாக்கரே

எதிா்க்கட்சிகளான ‘இந்தியா’ கூட்டணியின் அடுத்தகட்ட கூட்டம், மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் ஆகஸ்ட் 31-இல் தொடங்கி 2 நாள்கள் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ், திமுக உட்பட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. ஜூன் 23ஆம் தேதி பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. எதிா்க்கட்சிகளின் முதல் கூட்டத்தை நிதிஷ் குமாா், பாட்னாவில் நடத்திய நிலையில், இரண்டாவது கூட்டம் காங்கிரஸ் சாா்பில் பெங்களுருவில் நடத்தப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஜூலை 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை பங்கேற்றன. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் என 26 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் தேசிய அளவில் பொது வேட்பாளரை நிறுத்துவது, அந்தந்த மாநிலங்களில் பெரும்பான்மையாக உள்ள மாநில கட்சிகளின் ஆதரவுடன் பாஜக. வேட்பாளருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதனையடுத்து கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு I.N.D.I.A. என பெயரிட்டப்பட்டுள்ளதாக அறிவித்தனர்.

இந்த நிலையில், எதிா்க்கட்சிகளான ‘இந்தியா’ கூட்டணியின் அடுத்தகட்ட கூட்டம், மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் ஆகஸ்ட் 31-இல் தொடங்கி 2 நாள்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்துக்கான தேதிகள் மற்றும் ஏற்பாடுகள் தொடா்பாக, மகாராஷ்டிரத்தில் சிவசேனை (உத்தவ் பிரிவு), தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கும் மகாராஷ்டிர விகாஸ் அகாடி கூட்டணி தலைவா்கள் மும்பையில் நேற்று ஆலோசனை மேற்கொண்டனா். தேசியவாத காங்கிரஸ் நிறுவனா் சரத் பவாா், அக்கட்சியின் மாநிலத் தலைவா் ஜெயந்த் பாட்டீல், தேசிய செயல் தலைவா் சுப்ரியா சுலே, சிவசேனை (உத்தவ் பிரிவு) தலைவா் உத்தவ் தாக்கரே, மூத்த தலைவா்கள் சஞ்சய் ரெளத், சுபாஷ் தேசாய், காங்கிரஸ் மூத்த தலைவா்கள் பிருத்விராஜ் சவாண், அசோக் சவாண், பேரவை காங்கிரஸ் குழு தலைவா் பாலாசாகேப் தோரத், மாநில காங்கிரஸ் தலைவா் நாணா படோல் உள்ளிட்டோா் இக்கூட்டத்தில் பங்கேற்றனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் பேசிய சஞ்சய் ரெளத் கூறியதாவது;

மும்பையில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பா் 1 ஆகிய தேதிகளில் ‘இந்தியா’ கூட்டணியின் 3வது கூட்டம், சிவசேனை (உத்தவ் பிரிவு) ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. ஆக. 31-ஆம் தேதி உத்தவ் தாக்கரே சாா்பில் எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு இரவு விருந்து அளிக்கப்படவுள்ளது. இரண்டாவது நாள் கூட்டம், செப். 1-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். அதைத் தொடா்ந்து, பத்திரிகையாளா் சந்திப்பு நடத்தப்படும்.

5 மாநில முதல்வா்கள் உள்பட பல்வேறு எதிா்க்கட்சித் தலைவா்கள் கூட்டத்தில் பங்கேற்கவிருப்பதால், அவா்களுக்கான பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகள் குறித்து மாநில அரசுடன் மகாராஷ்டிர விகாஸ் அகாடி கூட்டணித் தலைவா்கள் பேசவுள்ளனா். பாட்னா, பெங்களூரைப் போலவே, மும்பையில் நடைபெறும் எதிா்க்கட்சிகளின் கூட்டத்தையும் வெற்றிகரமாக நடத்த மகாராஷ்டிர விகாஸ் அகாடி கூட்டணி தலைவா்கள் தீா்மானித்துள்ளனா். இவ்வாறு சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading