முக்கியச் செய்திகள்இந்தியாசெய்திகள்

இஸ்ரேலில் இருந்து புறப்பட்ட 4வது விமானம் – 274 பயணிகளுடன் டெல்லி வந்தடைந்தது..!

274 இந்தியர்களுடன் இஸ்ரேலில் இருந்து புறப்பட்ட 3வது விமானம் டெல்லி வந்தடைந்தது.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ம் தேதி காலை ராக்கெட்டுகளை வீசியும், இஸ்ரேலுக்கு நுழைந்தும் திடீா் தாக்குதல் நடத்தினா். இதன்பின்னர் பதிலடியாக இஸ்ரேலும் பதிலுக்கு நடத்தியதில் இரண்டு நாடுகளிலும் 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனா்.  9000க்கும் மேற்பட்டோா் படுகாயம் அடைந்தனா்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதன் பின்னர் இஸ்ரேல், போா்ப் பிரகடனம் அறிவித்து நடத்திய பதிலடி தாக்குதல் நடத்தில்  காஸா பகுதியில் மின்சாரம், தண்ணீர் மற்றும் எல்லை ஆகியவற்றை தடை செய்தது.  இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதேபோல போர் பிரகடணம் அறிவித்துள்ள இஸ்ரேலுக்கும் கண்டனங்கள் வலுத்து வலுகிறது.

ரஷ்யா, ஈரான், சவூதி உள்ளிட்ட நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  காஸா எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சண்டை 8வது நாளாக தொடா்ந்து வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள வைர வியாபாரிகள், தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள், மாணவர்கள் என சுமாா் 18,000 இந்தியர்கள் இஸ்ரேலில் வசித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்தது.  மேலும் இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இஸ்ரேல்- ஹமாஸ் குழு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை அழைத்து வர ஆப்ரேஷன் அஜய் திட்டத்தின் மூலம்
முதற்கட்டமாக நேற்று முன்தினம் 212  பேர் அழைத்து வரப்பட்டனர். மேலும் அங்கு சிக்கியுள்ளவர்கள் படிப்படியாக தாயகம் அழைத்து வரப்பட உள்ளதாக  தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 235 இந்தியர்களுடன் இஸ்ரேலில் இருந்து புறப்பட்ட 2வது விமானம் நேற்று டெல்லி வந்தடைந்தது. இவர்களில்  28பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா நிறுவனம் மேலும் 2 சிறப்பு விமானங்களை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் இஸ்ரேலில் இருந்து இன்று அதிகாலை 274 இந்தியர்களுடன்  வந்த 3வது சிறப்பு விமானத்தில் டெல்லி வந்தடைந்தது. இதில்  22 தமிழர்கள் அடக்கம்.  இவர்களில் 11 பேர் பெண்கள், இவர்கள் அனைவரையும் சென்னை மற்றும் கோவைக்கு அனுப்ப தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

சென்னையில் சர்வதேச ஓபன் மகளிர் டென்னிஸ் தொடர் இன்று தொடக்கம்

EZHILARASAN D

மக்களவை தேர்தல் 2024 | அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு!

Web Editor

ஜெயக்குமார் கொலை வழக்கு: உடனடியாக விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீசார்!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading