தமிழ்நாட்டில் 27 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 39 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அண்மையில் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் உட்பட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டனர். பல்வேறு துறைகளுக்கான செயலாளர்கள் மாற்றப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கடந்த மே 16 ஆம் தேதி, 16 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 48 ஐஏஎஸ் அதிகாரிகளை ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து மீண்டும் அதிக எண்ணிக்கையிலான ஐபிஎஸ் அதிகாரிகளை ஒரே நாளில் பணியிடமாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாகவும், பணியிட மாற்ற பட்டியல் தயாராகி வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் நியூஸ்7 தமிழ் முன்னதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில், 27 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 39 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஆவடி மாநகர ஆணையராக அருண், திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பியாக ஆல்பர்ட் ஜான், சென்னை பூக்கடை துணை ஆணையராக ஸ்ரேயா குப்தா, நாகை மாவட்ட எஸ்.பியாக ஹர்ஸ் சிங், சென்னை மாநகர நிர்வாகப்பிரிவு துணை ஆணையராக சீனிவாசன், ஈரோடு மாவட்ட எஸ்.பியாக ஜவகர், க்யூ பிரிவு எஸ்.பியாக சசிமோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி.சரவணன் சென்னை போக்குவரத்து வடக்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்ட எஸ்.பியாக ராஜேஷ் கண்ணன், மாநில குற்ற ஆவணகாப்பக எஸ்.பியாக கலைச்செல்வன், வேலூர் எஸ்.பியாக மணிவண்ணன், செங்கல்பட்டு எஸ்.பியாக சாய் பிரனீத், மதுரை தெற்கு துணை ஆணையராக காத்திருப்போர் பட்டியலில் இருந்த பிரதீப் ஆகியோரை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
சிபிசிஐடி சைபர் பிரிவு எஸ்.பியாக ஸ்ரீதேவி, திருச்சி தெற்கு துணை ஆணையராக எஸ்.பி.செல்வகுமார், ஆவடி செங்குன்றம் துணை ஆணையராக பாலகிருஷ்ணன், பாதுகாப்புபிரிவு எஸ்.பியாக ராஜேந்திரன், திருப்பூர் மாவட்ட எஸ்.பியாக சாமிநாதன், விழுப்புரம் மாவட்ட எஸ்.பியாக சஷாங் சாய், கமண்டோ பிரிவு எஸ்.பியாக அருண் பாலகோபாலன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநில உளவுத்துறை எஸ்.பி.சரவணனுக்கு ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு எஸ்.பியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மாநில காவல் கட்டுப்பாட்டு அறை எஸ்.பி தீபா சத்தியன் தமிழ்நாடு போலீஸ் அகாடமி எஸ்.பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உளவுத்துறை கூடுதல் எஸ்.பி. சரவண குமாருக்கு ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு எஸ்.பியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் கூடுதல் எஸ்.பி.வினோத் சாந்தாராமுக்கு சிபிசிஐடி சிறப்பு பிரிவு எஸ்பியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் மாநகர கூடுதல் ஆணையர் காமினி குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு ஐ.ஜியாக மாற்றப்பட்டுள்ளார். ஆயுதப்படை ஐ.ஜி. ராதிகா அமலாக்கப்பிரிவு ஐ.ஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகர கூடுதல் ஆணையர் அன்பு, சிபிசிஐடி ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகர தலைமையிட கூடுதல் ஆணையர் லோகநாதன் சென்னை வடக்கு கூடுதல் ஆணையராக பணியமர்த்தப்பட்டுள்ளார். ஆவடி மாநகர கூடுதல் ஆணையர் நஜ்மல் ஹோடா தலைமையிட நலப்பிரிவு ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். அமலாக்கப்பிரிவு ஐ.ஜி ரூபேஷ்குமார் மீனா சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல், ஏடிஜிபியாக இருந்த ராஜீவ் குமாருக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆவடி காவல் ஆணையராக இருந்த சந்திப் ராய் ரத்தோர், காவல் பயிற்சி அகடாமி டி.ஜி.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏ.டி.ஜி.பியாக இருந்த அபய் குமார் சிங், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை டி.ஜி.பி-யாக பதவி உயர்வு பெற்று நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மின்சார வாரிய ஊழல் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பியாக இருந்த வன்னிய பெருமாள் அதன் டி.ஜி.பி-யாக நியமனமிக்கப்பட்டுள்ளார்.