1000 கிராமிய கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3000 நிதியுதவி – ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்

நலிந்த நிலையில் வாழும் 1000 கிராமிய கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3000 நிதியுதவி வழங்கிடும் அடையாளமாக, 4 கலைஞர்களுக்கு நிதியுதவிக்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக…

நலிந்த நிலையில் வாழும் 1000 கிராமிய கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3000 நிதியுதவி வழங்கிடும் அடையாளமாக, 4 கலைஞர்களுக்கு நிதியுதவிக்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழியாக தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கிடும் அடையாளமாக, 6 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழிக்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

தொடர்ந்து தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் 500 கிராமியக் கலைஞர்களுக்கு இசைக் கருவிகள் மற்றும் ஆடை, அணிகலன்கள் வாங்கிட தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கிடும் அடையாளமாக, 5 கிராமியக் கலைஞர்களுக்கு நிதியுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.

மேலும், நலிந்த நிலையில் வாழும் மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 1000 கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3000 நிதியுதவி வழங்கிடும் அடையாளமாக, 4 கலைஞர்களுக்கு நிதியுதவிக்கான ஆணைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதையும் படியுங்கள் : “வாழ்க்கையில் நிறைய இழப்புகள்… வலிகளுடன் வாழ பழகுகிறேன்” – விஜய் ஆண்டனி உருக்கம்

இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் தலைவர் வாகை சந்திரசேகர், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் க.மணிவாசன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலர் விஜயா தாயன்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.