இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியில் விக்கெட் இழப்பின்றி ஆஸ்திரேலியா அணி 121 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் தோற்றது. இதைத்தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மும்பையில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சை எதிர்க்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
விராட் கோலி சற்று நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 36 ரன்கள் சேர்த்தார். இறுதியில் இந்திய அணி 26 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதையடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக மிட்சேல் மார்ஷ் , டிரேவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இந்திய வீரர்களின் பந்துகளை நாலா புறமும் பறக்கவிட்டனர். இருவரும் இணைந்து பந்துகளை பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக அடித்து துவம்சம் செய்தனர். மார்ஷ் 36பந்துகளில் 66 ரன்கள் , ஹெட் 30பந்துகளில் 51ரன்கள் எடுத்தனர். இறுதியில் 11 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது.