ரயில்வே சொத்துகளை சேதப்படுத்தியதாக 2,600 பேர் கைது-மக்களவையில் தகவல்

“அக்னிபாத் திட்டம்” அறிவிக்கப்பட்டபோது ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்தியதாக 2,600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்; 2 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய ரயில்வே அமைச்சகம் மக்களவையில் தெரிவித்தது. அக்னிபாத் திட்டம் அறிவிக்கப்பட்டபோது நாடு முழுவதும் ரயில்கள்…

அக்னிபாத் திட்டம்” அறிவிக்கப்பட்டபோது ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்தியதாக 2,600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்; 2 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய ரயில்வே அமைச்சகம் மக்களவையில் தெரிவித்தது.

அக்னிபாத் திட்டம் அறிவிக்கப்பட்டபோது நாடு முழுவதும் ரயில்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன மற்றும் ரயில் நிலையங்கள் சேதப்படுத்தப்பட்டது.

இதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை? இழப்பு ஏற்பட்ட ரயில்வே சொத்தின் மதிப்பு மற்றும் இதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்களா? என மக்களவையில் உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்கள் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்கள்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

மத்திய ரயில்வே, கிழக்கு ரயில்வே, தென்னக ரயில்வே என ரயில்வேயில் உள்ள 12 மண்டலங்களில் “அக்னிபாத்” திட்டத்திற்கு எதிராக கிளர்ச்சியை தூண்டியதாக 2,642 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் அதிகபட்சமாக தென்னக ரயில்வேயில் மட்டும் 1,051 பேர் கைது செய்யப்பட்டுள்னர்.

கிழக்கு ரயில்வே மற்றும் தெற்கு மத்திய மண்டல ரயில்வேயில் தலா ஒருவர் அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது உயிரிழந்து உள்ளதாகவும், அதேபோல் கிழக்கு ரயில்வேயில் 14 பேரும், தெற்கு மத்திய மண்டல ரயில்வேயில் 21 பேர் காயம் அடைந்தனர் என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.