முக்கியச் செய்திகள் கொரோனா

2,014 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி!

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 2,014 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையில், தற்போது மீண்டும் படிப்படியாக கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கி இருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ்நாட்டின் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அடங்கிய விவரத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுவருகிறது. அதன்படி, இன்று ஒரே நாளில் 2,014 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 15,843 ஆக உள்ளது.

அண்மைச் செய்தி: ‘’மின் கட்டண உயர்வு; திமுக அரசின் தவறான அணுகுமுறையே காரணம்’ – முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்’

கொரோனா தொற்றால் 0 உயிரிழப்பும், 2,324 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். சென்னையில் 431 பேருக்கும், செங்கல்பட்டில் 212 பேருக்கும், கோவையில், 178 பேருக்கும், திருச்சியில் 36 பேருக்கும், திருவள்ளூரில் 89 பேருக்கும் என ஒட்டுமொத்தமாக இன்று 2,014 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

புஷ்பா – 2 திரைப்படத்தில் நடிக்க ஆசையா!

Web Editor

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: அரசுப்பள்ளி மாணவர்களுடன் போட்டிகளை கண்டுகளித்தார் அமைச்சர் உதயநிதி!

Web Editor

கீழடியில் ஒரே குழியில் 7 மனித எலும்புக் கூடுகள்!

Halley Karthik