அரசு கல்லூரிகளில் 20% கூடுதல் இடங்கள்: அமைச்சர் பொன்முடி

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை கல்லூரிகளில் 20 சதவீதமும், தனியார் கலை கல்லூரிகளில் 15 சதவீதமும் மாணவர்களை கூடுதலாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.…

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை கல்லூரிகளில் 20 சதவீதமும், தனியார் கலை
கல்லூரிகளில் 15 சதவீதமும் மாணவர்களை கூடுதலாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெற்று வரும்
நிலையில் சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்க அலுவலகத்தில் இயங்கி வரும் பொறியியல் மாணவர் சேர்க்கை உதவி மையத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் பழைய கட்டண முறைப்படி
மட்டுமே கட்டணத்தை பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை கல்லூரிகளில் 20 சதவீதமும், தனியார் கலை
கல்லூரிகளில் 15 சதவீதமும் மாணவர்களை கூடுதலாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழகத்தின் தான் 53% பேர் உயர்கல்வி பயில்கின்றனர்.

முதலாமாண்டு பொறியியல் படிப்பில் சேருவதற்காக மொத்தம் 1,56,278 விண்ணப்பங்கள்
சரிபார்க்கப்பட்டு கலந்தாய்வு தொடங்கியுள்ளது.

முதல் ரேங்க் முதல் 14,524 வது ரேங்க் வரை உள்ளவர்களுக்கு 12ந் தேதி வரை
கலந்தாய்வு நடைபெறும். 15 ந் தேதி மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை கொடுக்கப்படும். அன்றிலிருந்து மாணவர்கள் ஒரு வாரத்திற்குள் 15,000 கட்டணத் தொகையை செலுத்த வேண்டும்.

அவ்வாறு  பணம் கட்டாத மாணவர்களின் இடம் காலியிடமாக கருதப்பட்டு அடுத்த ரேங்க்கில் உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும். இன்று தொலைபேசி மூலம் மட்டும் 200 பேருக்கு மேல் சந்தேகங்களை கேட்டுள்ளனர்.

சென்ற ஆண்டு 50 இடங்களில் இருந்து ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டது. இந்த ஆண்டு 110 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 7.5% இட ஒதுக்கீட்டில் 6 – 12 ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவ-மாணவியருக்கு கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இடம் வழங்க வேண்டும் என்ற முதலமைச்சரின் உத்தரவு பெரிய பலனைத் தந்துள்ளது.

7.5% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 11,150 பேருக்கு சீட் வழங்க முடியும்.
ஆனால் 23,321 விண்ணப்பங்கள் வந்துள்ளன. 12,982 ஆண்களும் 10,339 பெண்களும்
விண்ணப்பித்துள்ளனர்.

இதன் மூலம் சேரும் பெண்களுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம்
ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பாலிடெக்னிக் படித்த மாணவர்கள் இரண்டாம் ஆண்டு சேருவதற்கான வாய்ப்பை மற்ற கல்லூரிகளை போல அண்ணா பல்கலைகழகமும் வழங்குகிறது.

இரண்டாம் ஆண்டில் 852 காலியிடங்கள் உள்ளன. அதில் தற்போது வரை 811 சேர்ந்துள்ளனர். அண்ணா பல்கலையில் சேர நுழைவுத் தேர்வு இருந்த போது 25 ஆயிரம் கிராமப்புற மாணவர்கள் சேர்ந்தனர். கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது நுழைவுத் தேர்வை ரத்து செய்த பின்னர் 75 ஆயிரம் கிராமப் புற மாணவர்கள் சேர்ந்தனர்.

கிராமப்புற மாணவர்கள், அரசுப்பள்ளி மாணவர்கள் அதிகளவில் உயர்கல்வியில் சேர
வேண்டும் என்பதற்காகவே முதலமைச்சர் நீட் தேர்வு வேண்டாம் என்கிறார்.

இந்தியாவை பொறுத்தவரை தமிழகத்தின் தான் 53% பேர் உயர்கல்வி பயில்கின்றனர்.

தொழிற்சாலைகளுடன் கலந்தாலோசித்து பொறியியல் கல்லூரிகளின் பாடத்திட்டங்களை மாற்ற வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வேலை தேடுபவர்களாக இருப்பதை விட வேலை தறுபவர்களாக மாணவர்கள் வருங்காலத்தில் வர வேண்டும் என்பதே முதலமைச்சர் நான் முதல்வன் திட்டத்தின் நோக்கம். அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது.

அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் பழைய கட்டண முறைப்படி
மட்டுமே கட்டணத்தைப் பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு கலை கல்லூரிகளில் கூடுதல் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு கலை கல்லூரிகளில் 20% அதிகமும் தனியார் கலை கல்லூரிகளில் 15% அதிகமும் கூடுதலாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் பொன்முடி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.