தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 706 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், புதிதாக 33 ஆயிரத்து 181 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதிகபட்சமாக சென்னையில் 6 ஆயிரத்து 247 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், சென்னையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 146 ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 41 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 166 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆயிரத்து 835 பேருக்கும், மதுரை மாவட்டத்தில் ஆயிரத்து 95 பேருக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயிரத்து 30 பேருக்கும், திருச்சி மாவட்டத்தில் ஆயிரத்து 569 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே, தொற்றில் இருந்து குணமடைந்து நேற்று ஒரே நாளில் 21 ஆயிரத்து 317 பேர் வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், எவ்வித இணை நோய் ஏதுமின்றி 84 பேர் உள்ளிட்ட 311 பேர் உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் மொத்த தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை 18,29,26,460 குறிப்பிடத்தக்கது.