33.3 C
Chennai
May 31, 2024
முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

1,500 நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள்: அமைச்சர்

தமிழ்நாடு முழுவதும் 1,500 நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை அடுத்த மாந்தோப்பு பகுதியில், நடமாடும் மருத்துவ முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை, அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்து 500 நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் இயங்கி வருவதாக தெரிவித்தார். அதில் சென்னையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர் , நீர்த்தேக்கம் இருக்கும் பகுதிகளில் இந்த வாகனங்கள் சென்று மருத்துவ சேவைகளை வழங்கும் என உறுதி அளித்தார்.

சுகாதாரத்துறை சார்பில் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் 4,055 இடங்களில் பருவ மழைக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருவதாகவும், இந்த முகாம்களில் 1,53,000 கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளனர் என்றும் கூறிய அமைச்சர், ழைக் காலத்தில் ஏற்படுகிற காய்ச்சல் இருமல் வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு நோய்களில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading