இந்தியாவில் இதுவரை 14,19 கோடி கொரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 15.82 சதவீதம் அதாவது 2,682,751 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதிசெய்துள்ளது. இந்நிலையில் நாட்டில் இதுவரை 14,19 கோடி தடுப்பூசிகள் மக்களுக்குப் செலுத்தப்பட்டுள்ளது என்ற தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பகிர்ந்துள்ளது. அந்த தகவல்களின்படி 10.82 கோடி தடுப்பூசிகள் 45 வயதிற்கு மேலுள்ளவர்களுக்கும் 153.06 கோடி தடுப்பூசிகள் சுகாதார ஊழியர்களுக்கும் 64.29 கோடி தடுப்பூசிகள் முன்களப் பணியாளர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் டோஸ் மற்றும் இரண்டாம் டோஸ் ஆகிய இரண்டும் அடங்கும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து நாட்டில் அதிகபட்சமாக 90 சதவீதம் கொரோனா தடுப்பூசிகள் போட்டுக்கொண்ட மாநிலங்களில் 12 மாநிலங்கள் முன்னிலையில் உள்ளது. அதில் ஆந்திரபிரதேசம் (90.5%), இமாச்சலபிரதேசம் (90.9%), கேரளா (91.9%), ராஜஸ்தான் (93.4%), லடாக் (93.8%), உத்தரகாண்ட் (94.8%), பீகார் (95.2%), தாமனும் தியுவும் (96.5%), மத்திய பிரதேசம் (97.8%), சத்தீஸ்கர் (98.0%), குஜராத் (100.0%) மற்றும் ஜார்கண்ட் (100.0%) ஆகிய மாநிலங்கள் அடங்கும். இதனால் இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்டுள்ள மாநிலங்களின் மொத்த சதவீதம் 87.89 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் நாட்டில் இதுவரை 1,95,123 பேர் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.