புதுக்கோட்டை அருகே பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு ஆம்புலன்ஸிலேயே குழந்தை பிறந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
புதுக்கோட்டை – தஞ்சாவூர் சாலையில் முள்ளூர் அருகேயுள்ள கும்முபட்டி கிராமத்தில் ராமாயி(30) என்ற கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அந்த கர்ப்பிணி 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எதிர்பாராத விதமாக ராமாயிக்கு ஆம்புலன்ஸில் சென்று கொண்டிருந்தபோதே பிரசவ வலி அதிகமாகியுள்ளது.இதனால் உடனடியாக மருத்துவ உதவியாளர் மணிமேகலை மற்றும் ஓட்டுநர் ஏழுமலை ஆகியோர் சாதுரியமாக செயல்பட்டு, ஆம்புலன்ஸிலேயே ராமாயிக்கு பிரசவம் பார்த்தனர். இதையடுத்து ராமாயிக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் அவர்கள் புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தாயும் சேயும் நலமாக இருக்கும் நிலையில், மருத்துவ உதவியாளர் மணிமேகலை மற்றும் ஓட்டுநர் ஏழுமலைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்