நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயில் திருத்தேர் பெருவிழாவில் யானை வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சியில் ஏராளமானப் பக்தர்கள் கலந்துகொண்டனர்.
நாமக்கல் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு நரசிம்மர், அருள்மிகு
அரங்கநாதர், அருள்மிகு ஆஞ்சநேயர் ஆகிய திருக்கோவிலின் பங்குனி மாத திருத்தேர்
பெருவிழா மிக விமர்சையாக கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா மிக விமர்சையாக நடைபெற்று வருகின்றன. திருவீதி விழாவை முன்னிட்டு நரசிம்மரும் அரங்கநாதரும் யானை வாகனத்தில் பல்வேறு வீதிகள் வழியாக பக்தர்களுக்கு திருக்காட்சிஅளிக்கும் நிகழ்வு மிக விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
—ரெ.வீரம்மாதேவி







