விடுதலை புலிகள் இயக்கத்துக்கு எதிராக இங்கிலாந்து பாதுகாப்பு நிறுவனம் செயல்பட்டதா? ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை விசாரணை!

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது விடுதலை புலிகள் இயக்கத்திற்கு எதிராக இங்கிலாந்து பாதுகாப்பு நிறுவனம் செயல்பட்டதா என்பது தொடர்பாக ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது. இலங்கையில் 1980 ஆம் ஆண்டு காலகட்டங்களில் அந்த…

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது விடுதலை புலிகள் இயக்கத்திற்கு எதிராக இங்கிலாந்து பாதுகாப்பு நிறுவனம் செயல்பட்டதா என்பது தொடர்பாக ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.

இலங்கையில் 1980 ஆம் ஆண்டு காலகட்டங்களில் அந்த நாட்டு அரசுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான போரின் போது இங்கிலாந்தில் உள்ள கே.எம்.எஸ் என்ற பாதுகாப்பு நிறுவனம் இலங்கையில் சிறப்பு காவல்படைக்கு பயிற்சிகள் வழங்கியது மற்றும் போர் குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பாக இங்கிலாந்து நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. ம்இந்த தகவலை தொடர்ந்து இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான சண்டையில் இங்கிலாந்து பாதுகாப்பு நிறுவனத்தின் பங்கு குறித்து ஸ்காட்லாந்து யார்டு போர்க்குற்ற குழு ம்விசாரணையை தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக தெரிவித்துள்ள இங்கிலாந்தை சேர்ந்த புலனாய்வு பத்திரிகையாளர் பில் மில்லர் இந்த காவல்துறை விசாரணையை நான் வரவேற்கிறேன். இது நீண்ட கால தாமதமாகும். கே.எம்.எஸ்.க்கு எதிரான பெரும்பாலான சான்றுகள் இங்கிலாந்து வெளியுறவு அலுவலக கோப்புகளில் 30 ஆண்டுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையின் கொந்தளிப்பான வரலாற்றில் இந்த இங்கிலாந்து நிறுவனத்தின் பங்கு எந்த அளவிற்கு உள்ளது என்றும் கேட்க நிறைய கேள்விகள் உள்ளன என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply