முன்னாள் ரவுடியை கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள மர்ம நபர்கள், அவரது, உடலை பெருந்துறை பகுதி தேசிய நெடுஞ்சாலை ஓரமாக முட்புதரில் வீசிச் சென்றுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சேலம்- கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் முட்புதரில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ரத்த காயங்களுடன் கிடந்த அந்த உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர், ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஓலப்பாளையம் பகுதியில் வசித்து வந்த முன்னாள் ரவுடி முத்துப்பாண்டி என்பது தெரிய வந்தது. மேலும், இவர் மேல் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள சில வருடங்களாக எந்த குற்றத்திலும் ஈடுபடாமல் இருந்த நிலையில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றுள்ளதா அல்லது நண்பர்களுடன் மது அருந்த சென்றபோ ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.







