பீட்டர்பாலின் முதல் மனைவி தொடர்ந்த வழக்கில் டிசம்பர் 23ஆம் தேதி ஆஜராகும்படி, நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பாலுக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை வனிதா விஜயகுமார், கடந்த ஜூன் மாதம், பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து பீட்டர்பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், தன்னுடனான திருமணம் ரத்து செய்யப்படாத நிலையில் வனிதா விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டது குற்றம் எனக் கூறி, வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், எலிசபெத் ஹெலன், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், கணவர் பீட்டர் பால் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், பொது இடத்தில் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் குற்றம் சாட்டினார்.