சாலையில் சென்ற பாம்பை மீட்டு தோளில் போட்டு கொண்டு மதுபாட்டில் வாங்க வந்தவைக் கண்டு மற்றவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. அந்த கடைக்கு நேற்று மாலை ஒருவர் தோளில் துண்டு போட்டுக்கொண்டு வருவதுபோல சுமார் 7 அடி நீளம் கொண்ட சாரை பாம்பை தோளில் போட்டுக்கொண்டு நண்பர் ஒருவருடன் மது வாங்க இருசக்கர வாகனத்தில் வந்தார்.அப்போது, அங்கு மது வாங்க வந்த நின்றவர்கள் அலறியடித்தபடி அவருக்கு வழிவிட்டு ஓடினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த பாம்பை கையில் வைத்துக் கொண்டு வேடிக்கை காட்டியபடி அவரது செய்கை
இருந்ததால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் இதனை அதிசயமாக பார்த்தனர். பின்னர்
அந்த பாம்பை அவர் அணிந்திருந்த லுங்கியில் போட்டு மடித்துக் கட்டிக்கொண்டு இரு
சக்கர வாகனத்தில் ஏறி சென்றார். பின்னர் அவரை பின் தொடர்ந்து சென்றபோது அந்த
பாம்பை புலிப்பாக்கம் அருகே கொள்வாய் ஏரி அருகேயுள்ள முட்புதரில் விட்டு
விட்டார்.
இது குறித்து அவரிடம் கேட்டபோது, அவர் செங்கல்பட்டு அருகேயுள்ள
பரனூரை சேர்ந்த சங்கர் என்றும் அவர் வரும் வழியில் பாம்பு குறுக்கே ஓடியதால்
அவை வாகனங்களில் சிக்கி உயிரிழந்திடக்கூடாது என்ற எண்ணத்தில் பிடித்து
வந்து பாம்பின் உயிரை காப்பாற்றினேன் என்றார்.