தூத்துக்குடி ஆதிநாதா்ஆழ்வாா் திருக்கோயிலில் கொடியேற்றம்!

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வாா்திருநகாி ஆதிநாதா்ஆழ்வாா் திருக்கோயில் சுவாமி நம்மாழ்வாா் வைகாசி திருஅவதார திருவிழா கொடியேற்றம் இன்று சிறப்பாக நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் நவதிருப்பதிகளில் 9 வதும், குருவுக்கு அதிபதியாக ஆதிநாதா்ஆழ்வாா் திருக்கோயில்…

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வாா்திருநகாி ஆதிநாதா்ஆழ்வாா் திருக்கோயில் சுவாமி நம்மாழ்வாா் வைகாசி திருஅவதார திருவிழா கொடியேற்றம் இன்று சிறப்பாக நடைபெற்றது.

108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் நவதிருப்பதிகளில் 9 வதும், குருவுக்கு
அதிபதியாக ஆதிநாதா்ஆழ்வாா் திருக்கோயில் ஆழ்வாா்திருநகாியில்
அமைந்துள்ளது. இந்த திருத்தலத்தில் மூலவா் ஆதிநாதா் நின்ற திருக்கோலம். தாயாா்
ஆதிநாயகிவல்லி குருகூா்வல்லி என 2 நாச்சியாா்கள். ஸ்தல விருஷம் புளியமரம்.
மேலும் ஞானப்பிரான் என்ற திருநாமத்துடன் வராஹப்பெருமாள் தனி சன்னதியில்
அருள்பாலிக்கின்றாாா்.

இதையொட்டி நேற்று மாலை ஸ்ரீ சூரத்தாழ்வான் சன்னதியில் இருந்து தேங்காய் வாங்கி வந்து திருமுளைச்சாற்று நடைபெற்று விழா ஆரம்பமாயிற்று. இரவில் சுவாமி மதுரகவி ஆழ்வாா் தங்க தோளுக்கிணியானில் வீதி வலம் நடைபெற்றது.

அதன் பின்னா் இன்று காலை 6.00 – 2.30 மணிக்கு ர்ஷப லக்னத்தில் (துவஜாரோஹணம்) கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக சுவாமி நம்மாழ்வாா் சன்னதி கொடிமரத்திற்கு முன்பாக சா்வ ஆபரணங்கள் மாலைகள் சாற்றி சேவை சாதித்தாா். முன்னதாக நகா்வலம் வந்த கொடிப்பட்டத்திற்கு பூஜைகள் நடைபெற்றது. கொடிமரத்திற்கு நவகலச திருமஞ்சனம் நடைபெற்று மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. பின்னா் கொடிமரத்திற்கு அலங்காரம் செய்யப்பட்டது. ஆச்சாாியா புருஷா்கள் வேத விற்பனா்கள் பிரபந்த பாராயணம் செய்தனா். இன்றிலிருந்து 10 தினமும் மாலை சுவாமி நம்மஆழ்வாா் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறுகின்றது. விழாவின் சிறப்பு நிகழ்வான ஐந்தாம் திருநாள் வருகின்ற 28ம் தேதி காலையில் நவதிருப்பதி பெருமாளுக்கு மங்களாசாசனமும் இரவில் 9 கருட சேவையும் நடைபெறுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.