பெரும் சர்ச்சையை கிளப்பிய ”தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தடை செய்ய கூடாது என தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் கடந்த 5-ந்தேதி வெளியானது. இந்த திரைப்படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மேற்கு வங்காளத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் திரையிட தடை விதிப்பதாக அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்தார். இந்த படம் வெறுப்புணர்வையும் வன்முறையையும் ஏற்படுத்தக்கூடும் என்பதால் படத்தை தடை செய்வதாக அவர் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை எதிர்த்து படத்தின் தயாரிப்பு குழு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.அந்த மனுவில், திரைப்படத்திற்கு சிபிஎப்சி சான்றிதழ் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், திரைப்படத்துக்கான தடையை விதிக்க சட்டம் ஒழுங்கை மாநில அரசு காரணமாக காட்ட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்த்து. அதேபோல், தமிழ்நாட்டிலும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில், தி கேரள ஸ்டோரி திரைப்படத்திற்கு மேற்கு வங்காள அரசு விதித்த தடையை நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ” மேற்கு வங்காளத்தில் படத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. குறிப்பிட்ட சிலர் ஒரு விஷயத்தை எதிர்க்கிறார்கள் என்பதற்காக அதனை தடை செய்வீர்களா? பிடிக்கவில்லை என்றால் பார்க்க வேண்டாம். அதை விட்டுவிட்டு அடிப்படை உரிமையை எப்படி பறிக்க முடியும்” என்று கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் தி கேரள ஸ்டோரி திரைப்படத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ தடை செய்யக் கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது படத்திற்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை என தமிழ்நாடு அரசு பதிலளித்தது.