திருவாரூர் அருகே ரூ.6 கோடி மதிப்புள்ள, ஐந்தரை கிலோ எடை கொண்ட திமிங்கலம் எச்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவாரூரில் திமிங்கலம் எச்சம் கடத்தப்படுவதாக திருச்சி தலைமை வன பாதுகாவலர் சதீஷுக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. எனவே திருவாரூர் வனத்துறை அலுவலர் அறிவொளி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் தவீர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது அவர்கள் திருவாரூர் கொரடாச்சேரி சாலையிலுள்ள அம்மையப்பன் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்பொழுது நான்கு நபர்கள் 3 இரு சக்கர வாகனங்களில் வந்தபோது வனத்துறையினரை கண்டதும் இருசக்கர வாகனங்களை விட்டு தப்பி ஓடினர். அப்போது அலுவலர்கள் அவர்களை பிடித்தனர். இதில் சுரேஷ், பாலசுப்பிரமணியன், வேல்முருகன் ஆகிய மூவரும் பிடிபட்டனர் இதில் பிரதீப் ராஜ்குமார் என்பவர் தப்பிவிட்டார். பின்னர் வாகனங்களை ஆய்வு செய்த போது அதில் அவர்கள் கடத்தி வந்த ஐந்தரை கிலோ எடையுள்ள, ரூ.6 கோடி மதிப்புள்ள திமிங்கலம் எச்சம் கண்டறியப்பட்டது.
இதில் முக்கிய குற்றவாளி பிரதீப் குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் மூன்று நபரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளார்.







