தமிழகம்பக்திசெய்திகள்

சென்னப்பமலை ஸ்ரீசுப்பிரமணியர் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை: நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்பு!

ஆம்பூரை அடுத்த சின்னப்பமலை அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் ஆடி கிருத்திகையையொட்டி, நூற்றுக்கணக்கான பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பார்சனபல்லி சென்னப்பமலை அருள்மிகு
ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு தொடர்ந்து ஒரு வார
காலமாக சுற்றுவட்டாரத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் காவடி, புஷ்பக் காவடி, பன்னீர் காவடி என பல்வேறு வகையான காவடிகள் எடுத்து வந்து சாத்துபடி செய்து வரும் நிலையில் ஆலய வளாகத்தில் மழை வேண்டியும், சுப்பிரமணியர் மற்றும் அஷ்டலட்சுமிகள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேற திருவிளக்கு பூஜை செய்தும் வழிபட்டனர். பின்னர் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர்- க்கு  சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து வழிபாடு மேற்கொண்டனர்

ரூபி.காமராஜ்

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

அகதிகள் முகாமில் பிறந்த பெண் முதுகலைப் பட்டம் பெற்று சாதனை – குவியும் பாராட்டுக்கள்

Web Editor

12 மணி நேர வேலை; நல்ல முடிவு வராவிட்டால் போராட்டம் தொடரும் – சிஐடியு மாநில தலைவர் செளந்தரராஜன்

G SaravanaKumar

காரைக்காலில் அதிகரிக்கும் கொரோனா தொற்றுப் பரவல் – 35வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading