பள்ளி சிறுமிகளிடம் ஆபாசமாக பேசிய யூடியூபர் மதன் தலைமறைவு!

பள்ளி சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியதாக எழுந்த புகாரில், போலீசார் விசாரணைக்கு ஆஜரகாமல், யூடியூபர் மதன் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. செல்போனில் இளைய தலைமுறையினரை வசப்படுத்திய பப்ஜி விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்ட போதிலும்,…

பள்ளி சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியதாக எழுந்த புகாரில், போலீசார் விசாரணைக்கு ஆஜரகாமல், யூடியூபர் மதன் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

செல்போனில் இளைய தலைமுறையினரை வசப்படுத்திய பப்ஜி விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்ட போதிலும், விபிஎன் முறையில் இன்னும் ரகசியமாக இந்த விளையாட்டு விளையாடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் பப்ஜிக்கு மாற்றாக “ஃப்ரீ பயர்” (Free Fire) எனும் விளையாட்டு இணையத்தில் அதிகம் தரவிறக்கம் செய்யப்படுகிறது. இந்த விளையாட்டுகளை எவ்விதம் சிறப்பாக விளையாடுவது என்பது குறித்து, இளைஞர் மதன், யூடியூப் சமூக வலைதளத்தில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவர் தனது முகத்தை காட்டாமல் குரலை மட்டும் பதிவிட்டு வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்த நிலையில், அதில் ஆபாச வார்த்தைகளை பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியது.

விளையாட்டில் தன்னுடன் “சாட்” (Chat) செய்யும் பள்ளி சிறுமிகளின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சென்று பாலியல் ரீதியாக பேசி அத்துமீறியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் வந்ததை அடுத்து, மதனை விசாரணைக்கு இன்று ஆஜராகக்கூறி புளியந்தோப்பு துணை ஆணையர் அலுவலக போலீசர் உத்தரவிட்டு இருந்தனர். இந்நிலையில், விசாரணைக்கு ஆஜராகாமல் யூடியூபர் மதன் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

யூடியூப்பர் மதன் சிறுமிகளிடம் ஆபாசமாக பேசிய சாட்களும், வீடியோவில் சிறுவர்களிடம் ஆபாசமாகவும், தகாத வார்த்தைகளிலும் பேசிய ஆடியோவும், வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.