பேருந்தில் வெளிநாட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் 25 நாட்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரியிலிருந்து பெங்களூருவுக்கு சென்று கொண்டிருந்த படுக்கை வசதிகொண்ட ஏ.சி. பேருந்தில் நள்ளிரவில் பெண் பயணி ஒருவர் தனக்கு இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூச்சலிடுகிறார். இதனால் பதறிபோன மற்ற பயணிகள் விசாரித்த போது அருகில் அமர்ந்த இளைஞர் தான் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது. அந்த இளைஞரை சக பயணி மற்றும் பேருந்து ஓட்டுனர் அடித்து உதைத்தனர். தாக்குதல் வீடியோ வெளியானிது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இளைஞர் தாக்கப்படுவதை தடுத்த போது அவருடன் வந்த பெண்ணுக்கும் அடி விழுந்தது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த இளம் பெண் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் தன்னார்வலராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதியன்று பெங்களூருக்கு சுற்றுலா செல்ல புதுச்சேரியில் இருந்து சொகுசு பேருந்தில் சென்ற போது தான் பாலியல் தொல்லை சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாலியல் தொல்லை கொடுத்தவரை ஓட்டுனர் அடித்து உதைத்து பேருந்தில் இருந்து இறக்கி விட்டனர்.
பாதிக்கப்பட்ட பெண் இ-மெயில் மூலமாக புதுச்சேரி போலீசில் புகார் அளித்தார். உருளையான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த 25 நாட்களாக விசாரணை நடத்தி பாலியல் தொல்லை கொடுத்த பெங்களூருரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான சரத்தை கைது செய்தனர். இதனையடுத்து சரத்தை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா