விவசாயத்தை காக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்: நடிகர் சிவக்குமார்.

இளைய தலைமுறையினர் விவசாயத்தை காக்க வேண்டும் என்று, நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். உழவன் பவுண்டேஷன் சார்பாக “உழவர் விருதுகள் 2022” நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர்கள்…

இளைய தலைமுறையினர் விவசாயத்தை காக்க வேண்டும் என்று, நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

உழவன் பவுண்டேஷன் சார்பாக “உழவர் விருதுகள் 2022” நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா,கார்த்தி மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் போது விவசாயத்தில் சாதித்த விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து நடிகர்கள் சிவக்குமார், சூர்யா இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

அப்போது பேசிய நடிகர் சிவக்குமார், விவசாய குடும்ப பின்னணியை கொண்ட தமது குடும்பத்தின் ஆரம்பகால நினைவுகளை பகிர்ந்து கொண்டார். மேலும், இன்றைய இளைய தலைமுறையினர் விவசாயத்தை காக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.