கன்னியாகுமரி மாவட்டம்., நாகர்கோவில் அருகே ஏகத்துவ முஸ்லிம் ஜமாத்
சார்பில் மாணவர்களுக்கு மது மற்றும் போதை பழக்கங்களால் ஏற்படும் தீமைகளை விளக்கும் பயிற்சி முகாம் நடை பெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள இடவாக்குடியில் ஒவ்வொரு ஆண்டும் ஏகத்துவ முஸ்லீம் அமைப்பு சார்பில் இளைஞர்களுக்கு கோடை கால பயிற்சி வகுப்பு நடைபெறுவது வழக்கம்.
இதே போன்று இந்த ஆண்டு நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தன் ஒழுக்க பயிற்சி நடை பெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், மாணவர்கள் சுய ஒழுக்கத்தை கடைபிடிப்பது, போதை பழக்கத்தால் ஏற்படும் சமுதாய சீர்கேடு குறித்து விளக்கி கூறப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், அதனை பிறருக்கும் எடுத்து சொல்லும் வகையில் பிரச்சாரங்கள் செய்யவும் அறிவுறுத்தினர். இந்த பயிற்சி முகாமில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் ஏகத்துவ முஸ்லிம் அமைப்பு சார்பில் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
– ம. ஶ்ரீ மரகதம்