இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், தோல்வியை தவிர்க்க இந்திய அணி போராடி வருகிறது.
இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் நடந்து வருகிறது. மழையால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. 2-வது நாளில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 217 ரன்கள் மட்டுமே எடுத்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் தனது முதல் இன்னிங்சை நியூசிலாந்து அணி தொடங்கியது. அந்த அணி, 249 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். அடுத்து 32 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சை ஆடியது. 5-வது நாள் முடிவில், இந்திய அணி 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்திருந்தது. இதன் மூலம் 32 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
மழை பாதிப்பு காரணமாக, மாற்று நாளாக அறிவிக்கப்பட்டிருந்த 6-வது நாளான இன்று, கடைசி நாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இதனால் இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில், 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி, நியூசிலாந்து அணியை விட 138- ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இதனால், நியூசிலாந்து அணிக்கு 139-ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளது. தேநீர் இடைவேளை வரை, அந்த அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து அணி, எளிதாக வெற்றி பெற வாய்ப்பிருப்பதால், தோல்வியை தவிர்க்க இந்திய அணி போராடி வருகிறது.