29.7 C
Chennai
May 20, 2024
தொழில்நுட்பம் தமிழகம் செய்திகள் விருது

மின்மினிப் பூச்சிகளால் ஒளிர்ந்த ஆனைமலை! பொள்ளாச்சி இளைஞருக்கு கிடைத்த லண்டன் விருது!

ஆனைமலை புலிகள் காப்பகத்தில், லட்சக்கணக்கான மின்மினி பூச்சிகளின் ஒத்திசைவை படம் பிடித்த பொள்ளாச்சி இளைஞருக்கு லண்டன் இயற்கை வரலாறு அருங்காட்சியகம் சார்பில் விருது வழங்கப்பட்டது.

பொள்ளாச்சி அன்சாரி வீதி சேர்ந்த தொழிலதிபர் முரளி என்பவரது மகன் ஸ்ரீராம்
முரளி.  பட்டதாரி இளைஞரான இவர் காட்டுயிர் ஒளிப்பட கலையில் அதிக ஆர்வம் கொண்டுள்ளார்.  அவ்வப்போது வனப் பகுதிகளில் சென்று வன விலங்குகள் உள்ளிட்ட
அங்கு வாழும் உயிரினங்களை இயற்கையாக படம் பிடித்து வந்துள்ளார்.  கடந்த 2022 ஆண்டு ஆனைமலை புலிகள் காப்பதற்கு உட்பட்ட உலாந்தி வனப்பகுதியில் 4
மாதங்கள் முகாமிட்டு லட்சக்கணக்கான ஆண் மற்றும் பெண் மின்மினி பூச்சிகள் நடனம் ஆடுவதை தத்ரூபமாக படம் பிடித்தார்.  குறிப்பாக மர கிளைகளில் இருக்கும் ஆண் மினி பூச்சிகள் கீழ்ப்பகுதியில் இருக்கும் பெண் மின்மினி பூச்சிகளை
கவர்ந்து இனப்பெருக்கம் செய்வதற்கு ஒளி வெளிச்சம் போட்டு அழைக்கும் வகையில்
ஒத்திசைவை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட தத்ரூபமான காட்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு பொக்கிஷமாக அமைந்தது.

 

இதை கடந்த சில தினங்களுக்கு முன்பு லண்டன் இயற்கை வரலாறு அருங்காட்சியகம்
சார்பில் காட்டுயிர் ஒளிப்பட கலை விருதுகள் வழங்கும் விழாவில் இந்த
புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டது.  இதில் அமெரிக்கா, UK, லண்டன்,பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வனப்பகுதியில் வசிக்கும் வனவிலங்குகள் , ஊர்வினம், கடல் சார்ந்த உயிரினங்கள் முதுகெலும்பில்லா உயிரினங்கள் என 16 வகையான உயிரினங்களின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.  இதில் முதுகெலும்பில்லா உயிரினங்களை படம் பிடித்த பொள்ளாச்சியை சேர்ந்த ஸ்ரீராம் முரளிக்கு லண்டன் அருங்காட்சியகம் விருது வழங்கி கௌரவித்தது.

இது குறித்து ஸ்ரீராம் முரளி கூறுகையில் இந்தியா முழுவதும் காட்டுயிர் ஒளிப்பட கலையில் பலரும் சாதனை படைத்து வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த தனக்கு இந்த விருது கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது எனவும் ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் படம் பிடித்த மின்மினி பூச்சிகளை இன்று உலக அரங்கில் இடம்
பெறச் செய்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் வனப்பகுதியில் லட்சக்கணக்கான மின் பூச்சிகள் மரத்தின் மீது அமர்ந்து கொண்டு பெண் மின்மினி பூச்சிகளை கவர்வதற்காக ஒளி வெளிச்சம் போட்டு ஒத்திசைவான நிகழ்வை நிகழ்த்தியுள்ளது.

உலகம் முழுவதும் இது போன்ற ஒத்திசைவுகள் நடந்தாலும் ஆனைமலை புலிகள்
காப்பகத்தில் நடந்த இந்த நிகழ்வு இயற்கை அன்னை கொடுத்த தனித்துவம் எனவும்,
உலகம் முழுவதும் வந்திருந்த அனைவரின் பாராட்டையும் இந்த நிகழ்வு பெற்றுள்ளது.
மேலும் வனப்பகுதியில் உள்ள வன விலங்குகளை பாதுகாக்க வனத்துறையினர் மற்றும் அரசு எடுத்து வரும் முயற்சியை அனைவரும் புகழ்ந்து பாராட்டினார்கள், நமது வனப்பகுதியை காப்பாற்றவேண்டும் என்று அனைவருக்கும் விழிப்புணர்வு வேண்டும்
என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்

மேலும் உலக நாடுகளின் அரங்கில் ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியை மின்மினி பூச்சிகளின் நிகழ்வுகளை படம் பிடித்து விருது பெற்றமைக்கு காரணமாக இருந்த ஸ்ரீராம் முரளியை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading