அமெரிக்காவில் நடைபெற்றுவரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் வாய்ப்பிலேயே 88.39 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் நீரஜ் சோப்ரா.
குரூப் ஏ பிரிவில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற முதல் வீரர் நீரஜ் சோப்ரா.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது போலவே
மிக எளிமையாக அந்தச் சுற்றுக்குள் நுழைந்தார் நீரஜ் சோப்ரா. டோக்கியோ
ஒலிம்பிக் போட்டியில் 86.65 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
செக் குடியரசு வீரர் ஜாகுப் வட்லேஜ்ச் 85.23 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து இறுதி போட்டிக்கு முன்னேறினார். ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதித்த பிறகு நீரஜ் சோப்ரா, பாவோ நுர்மி விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றார்.
அந்தப் போட்டியில் 89.30 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து இரண்டாம் இடம் பிடித்தார். ஸ்டாக்ஹோம் டைமண்ட் லீக் போட்டியில் 89.94 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து சாதனை படைத்தார்.
நீரஜ் சோப்ரா கூறுகையில், “ஈட்டி எறிவதற்கு கையின் வேகத்தை மேம்படுத்துவது அவ்வளவு எளிதானது அல்ல. இயற்கையாகவே எனது கையின் வேகம் சிறப்பாக இருக்கிறது. கையின் வேகத்தை அதிகரிப்பதற்காக மிக அதிக உடற்பயிற்சிகளையும் செய்ய முடியாது. அதேநேரம், குறைந்த எடையிலான ஈட்டியை எறிந்து பயிற்சியில் ஈடுபடுவோம்” என்றார்.