34.4 C
Chennai
May 14, 2024
தமிழகம் செய்திகள்

குடிநீர் வழங்காதது கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்!

பெரியகுளம் அருகே, பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சிந்துவம்பட்டி, நடுப்பட்டி ஆகிய கிராமங்களில் கடந்த 50 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து, பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான சிந்துவம்பட்டி மற்றும் நடுப்பட்டி ஆகிய கிராமங்களில் கடந்த 50
நாட்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் பெரியகுளம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த சாலை மறியல் போராட்டத்தின்போது குடிநீர் வழங்க  பொம்மிநாயக்கன்பட்டி
ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர். தொடர்ந்து, உடனடியாக குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு வந்த தேவதானப்பட்டி காவல்துறை ஆய்வாளர் சங்கர் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக குடிநீர்
தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க உறுதி அளித்தார். இதை தொடர்ந்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் பெரியகுளம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

—ம. ஸ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading