முக்கியச் செய்திகள் மழை தமிழகம் செய்திகள்

தமிழக கடற்பகுதியில் இன்று காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும்: மீனவர்களுக்கு எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் “காரைக்காலில் இருந்து 610 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழக கடற்பகுதியில் இன்று காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்பதால் மீனவர்களுக்கு மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பெரும்பாலான விசைப்படகுகள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 11 கிமீ வேகத்தில் நகர்ந்து திருகோணமலைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 380 கி.மீ மற்றும் காரைக்காலில் இருந்து 610 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டு உள்ளது. இது இன்று மாலை வரை மேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. அதன்பிறகு, அது படிப்படியாக மேற்கு-தென்மேற்கு திசையில் திரும்பி நாளை இலங்கைக் கடற்கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் சுமார் 2 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது .

வங்க கடல் பகுதியில் சூறைகாற்றானது மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் வீசும் என வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளதால் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் 31.01.2023 முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல கூடாதென கடலூர் மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஏற்கனவே கடலில் உள்ள தங்குகடல் விசைப்படகுகள் அருகில் உள்ள துறைமுகம் மற்றும் இறங்குதளங்களுக்கு பாதுகாப்பாக கரைதிரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீனவர்கள் இந்த அறிவிப்பை தவறாது பின்பற்ற கடலூர் மீன்வளத்துறை இயக்குனர் கூறியுள்ளார்.

இதேபோல் தென் தமிழக கடற்கரை, மன்னார் வளைகுடா, குமரி கடற்கரை, தென்மேற்கு வங்காள விரிகுடா, மற்றும் ஸ்ரீலங்கா கடற்கரை பகுதியில் இன்று காற்றின் வேகம் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ வரையில் இருந்து அதிகரித்து 65 கிமீ வரையிலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன் வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், தேங்கப்பட்டினம் மீன் பிடி துறைமுகங்களில் இருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் பெரும்பாலான விசை படகுகள் மீன்பிடிக்க செல்ல வில்லை.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இனி சனிக்கிழமை தோறும் மெகா தடுப்பூசி முகாம்; அமைச்சர் தகவல்

G SaravanaKumar

ஓய்வை அறிவித்த டென்னிஸ் ஜாம்பவான் சானியா மிர்சா!

Yuthi

சூரிய கிரகணத்தின்போது உணவு சாப்பிட்ட கர்ப்பிணிகள்

EZHILARASAN D