தமிழகம் செய்திகள்

கொடைக்கானல் பேரிஜம் சுற்றுலா பகுதியில் காட்டு யானை நடமாட்டம்!

கொடைக்கானல் பேரிஜம் சுற்றுலா பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டத்தால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாதலமான பேரிஜம் வனப்பகுதி உள்ளது. கொடைக்கானல் வன உயிரின சரணாலயத்தில் யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, போன்ற வனவிலங்குகள் உள்ளன.

இங்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு வன அலுவலகத்தில் அனுமதி சீட்டு பெற்று செல்ல வேண்டும் ஏனெனில் இச்சுற்றுலா பகுதி வனத்துறை கட்டுபாட்டில் இருக்கிறது. இந்நிலையில் பேரிஜம் சுற்றுலா பகுதியில் 5 காட்டு யானைகள் குட்டியுடன் இருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

—அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram