“என் சமூகத்தை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங்கை நானே கொல்வேனா?” – நீதிமன்றத்தில் உணர்ச்சிவசமாக பேசிய நாகேந்திரன்!

“ஒரே சமூகத்தை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங்கை நான் ஏன் கொலை செய்ய போகிறேன்?” என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நாகேந்திரன் உணர்ச்சிவசமாக கேள்வி எழுப்பியுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின்…

“என் சமூகத்தை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங்கை நானே கொல்வேனா?” - நீதிமன்றத்தில் உணர்ச்சிவசமாக பேசிய நாகேந்திரன்!

ஒரே சமூகத்தை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங்கை நான் ஏன் கொலை செய்ய போகிறேன்?” என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நாகேந்திரன் உணர்ச்சிவசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் கொலைவழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நாகேந்திரன் உள்ளிட்ட 27 பேர் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பின் வழக்கறிஞரை நியமிக்க நீதிபதி அவகாசம் வழங்கினார்.

அப்போது நீதிபதியிடம் முறையிட்ட நாகேந்திரன், தான் வேலூர் சிறையில் இருந்து வருவதாகவும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால் நீண்ட தூரம் பயணிக்க முடியவில்லை என்றும், “ஒரே சமூகத்தை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங்கை நான் ஏன் கொலை செய்ய போகிறேன்? 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் என்னை காவல்துறை சிறையில் வைத்தே கொல்ல பார்க்கிறது எனவும் தெரிவித்தார்.

நாகேந்திரனின் பேச்சைக்கேட்ட நீதிபதி, “உணர்ச்சிப்பூர்வமாக பேச வேண்டாம். இந்த வழக்கின் விசாரணை நியாமான முறையில் நடத்தப்படும்” என தெரிவித்தார். வழக்கில் சாட்சி விசாரணை துவங்கிய பின், நாகேந்திரனை சிறை மாற்றுவது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என தெரிவித்த நீதிபதி, விசாரணையை டிசம்பர் 20ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.