ஐபிஎல் கோப்பையை வெல்லப்போவது யார்? – பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று மோதல்!

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று பெங்களூரு – குஜராத் அணிகள் மோதுகிறது.

19-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் ‘பிளே-ஆப்’ சுற்று முடிவில் பெங்களூரு அணி, குஜராத் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் இன்று இறுதி ஆட்டம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் பெங்களூரு – குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி கடந்த ஆண்டை போலவே இந்த சீசனிலும் கம்பீரமாக வெற்றி நடைபோடுகிறது. லீக் சுற்றில் 9 வெற்றி, 5 தோல்வியுடன் முதலிடம் பிடித்த பெங்களூரு அணி முதலாவது தகுதி சுற்றில் ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வீழ்த்தி 5-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

முதலாவது தகுதி சுற்றில் பெங்களூருவுக்கு எதிராக 92 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய குஜராத் அணி 2-வது தகுதி சுற்றில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி 3-வது முறையாக இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. ரஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபி அணி, கடந்த 2025 சீசனில் தனது முதல் கோப்பையை வென்ற நிலையில், தற்போது தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்கவைக்க போராடுகிறது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.