ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்கபோவது யார்…? சென்னை மற்றும் டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை…!

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 48 ஆவது லீக் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. டெல்லி அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டி இன்று இரவு 7 : 30 மணிக்கு தொடங்குகிறது.

நடப்புத் தொடரில் 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள டெல்லி அணி, 4 வெற்றி மற்றும் 5 தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.
மறுபுறம் சென்னை அணி 9 ஆட்டங்களில் 4 வெற்றி, 5 தோல்விகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.

முன்னதாக இந்த சீசனின் 18 ஆவது லீக் போட்டியில் இரு அணிகளும் மோதின. அப்போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றி பெற்றிருந்தது.

சென்னை மற்றும் டெல்லி அணிகள் 9 போட்டிகளில் 4 வெற்றி என சமநிலையில் உள்ளன. இதனால் இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று எந்த அணி 5 ஆவது வெற்றியை பதிவு செய்வார்கள் என்பதும் ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைப்பார்கள் என்பதும் முகுந்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.