அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடரின்போது, அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் நிறைவேற்றப்படாத திட்டங்கள், நிதி ஒதுக்கீடு செய்யாத திட்டங்கள் குறித்த 420 பக்கங்கள் கொண்ட புத்தகம் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் மேஜையில் வைக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதில், 9,740 கோடி ரூபாய் மதிப்பிலான 20 திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5,469 கோடி ரூபாய் மதிப்பிலான 26 திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அண்மைச் செய்தி: விருதுநகர் பாலியல் வன்கொடுமை விவகாரம்: கடும் தண்டனை பெற்று தரப்படும் – முதலமைச்சர்
76,618 கோடி ரூபாய் மதிப்பிலான 143 திட்டங்களுக்கு நிதி விடுவிக்கப்பட்டிருந்தாலும், பணி தொடங்கப்படாமல் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 1,47,922 கோடி ரூபாய் மதிப்பிலான 348 திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதற்கு 41,844 கோடி ரூபாய் மட்டும் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் ஆயிரத்து 167 திட்டங்கள் மட்டும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், அதன் மதிப்பீடு 87,405 கோடி ரூபாய் என்றும் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.